இப்போது உள்ள அதிமுகவே ஒருமைப்படுத்துவது எப்படி என்று எனக்கு தெரியும் – சசிகலா

அதிமுக என்ற கட்சியை ஒற்றுமைப்படுத்த எப்போது என்ன செய்ய வேண்டும் என்ன செய்ய வேண்டும் என எனக்கு தெரியும் என சசிகலா பேச்சு. 

அதிமுக 51-வது ஆண்டு விழாவை முன்னிட்டு சென்னை ராமவரம் தோட்டத்த்தில், எம்.ஜி.ஆர் திருவுருவ சிலைக்கு மலர்தூவி மாறியதய் செலுத்தினார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவரிடம், அதிமுகவை ஒன்றிணைக்க என்ன முயற்சி மேற்கொள்ளப்படும் எப்போது மேற்கொள்ளப்படும் என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த சசிகலா, அதிமுக என்ற கட்சியை ஒற்றுமைப்படுத்த எப்போது என்ன செய்ய வேண்டும்? எப்படி செய்ய வேண்டும் என்பது எனக்கு தெரியும். எம்ஜிஆர் மறைந்த பின் ஜானகி அணி ஜெயலலிதா அணி என இரு அணிகளாக இருந்த அதிமுகவை ஒற்றுமையாக மாற்றியது நான் தான். இந்த நிலையில் அப்படிப்பட்ட எனக்கு இப்போதுள்ள அதிமுகவை எப்படி ஒருமைப்படுத்துவது என்றும் தெரியும் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment