இபிஎஸ் தலைமையில் தான் 2024 தேர்தல் கூட்டணி.! நாங்க கொடுப்பது தான் சீட்டு.! ஜெயக்குமார் உறுதி.!

2024 நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக கூட்டணி தான் போட்டியிடும். – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உறுதி.

2024 தேர்தல் கூட்டணி குறித்து எழுந்த சந்தேகங்கள் தொடர்பாகவும் அரசியல் வட்டாரத்தில் பரவிய செய்திகள் குறித்தும் விரிவான விளக்கத்தை இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், தேர்தல் கூட்டணி பல்வேறு வதந்திகளை பலர் வெளியிடுகின்றனர். நாங்கள் யாரிடமும் மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை. வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக கூட்டணி தான் போட்டியிடும். நாங்கள் கொடுப்பது தான் சீட் என திட்டவட்டமாக தெரிவித்தார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment