புயல் பாதிப்புகள் குறித்த ஆய்வுகளை முடித்த பின், மீண்டும் தமிழக முதல்வரை சந்திக்க உள்ளோம்…!மத்தியக்குழு தலைவர்

கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று மத்தியக்குழு தலைவர் டேனியல் ரிச்சர்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திருவாரூரில் மத்தியக்குழு தலைவர் டேனியல் ரிச்சர்டு கூறுகையில், புயல் பாதிப்புகள் குறித்த ஆய்வுகளை முடித்த பின், மீண்டும் தமிழக முதல்வரை சந்திக்க உள்ளோம். கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லி சென்ற பின் மத்திய அரசிடம் அறிக்கையை தாக்கல் செய்வோம் என்றும்  மத்தியக்குழு தலைவர் டேனியல் ரிச்சர்டு தெரிவித்துள்ளார்.

Leave a Comment