பிரதமர் நரேந்திர மோடி தம்மை வணங்கிய அத்வானியைக் கண்டு கொள்ளாமல் சென்றதால் சர்ச்சை!

பிரதமர் மோடி திரிபுராவில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியின் போது, தம்மை வணங்கிய பாஜக மூத்த தலைவர் அத்வானியைக் கண்டு கொள்ளாமல்  கடந்து செல்லும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

திரிபுராவில் பிப்லாப் குமார்தேப் (Biplab Kumar Deb) தலைமையிலான பாஜக அமைச்சரவையின் பதவியேற்பு விழா, அகர்தலாவில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, மூத்த தலைவர் அத்வானி, 20 ஆண்டுகளாக திரிபுராவின் முதலமைச்சராக இருந்த மார்க்சிஸ்ட் கட்சியின் மாணிக்சர்க்கார் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் பங்கேற்றனர். விழாமேடைக்கு வருகை தந்த பிரதமர் மோடியை ராஜ்நாத் சிங், அத்வானி, அமித்ஷா, உள்ளிட்டோர் எழுந்து இருகரம் கூப்பி வரவேற்றனர். அப்போது, அனைவருக்கும் தனித்தனியாக வணக்கம் தெரிவித்த மோடி, அத்வானியை மட்டும் கண்டு கொள்ளாமல் கடந்து சென்று, அவருக்கு அருகிலே நின்றிருந்த முன்னாள் முதல்வர் மாணிக்சர்க்காரிடம் அளவளாவினார்.

இந்தக் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment