அதிமுகவினர் குலுக்கல் முறைக்கு எதிர்ப்பு .!

  • இன்று தமிழகத்தில் 27 மாவட்டங்களில் மறைமுக தேர்தல்  நடைபெற்று வருகிறது.
  • மங்களூர் ஒன்றியத்தில் குலுக்கல் முறைக்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கான மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர், ஒன்றிய குழு துணை தலைவர், ஊராட்சி துணை தலைவர் என 5 பதவிகளுக்கு மறைமுக தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள மங்களூர் ஒன்றியத்தில் இன்று மறைமுகத் தேர்தல் நடைபெற்றது .இந்த தேர்தலில் திமுக வேட்பாளரும் , அதிமுக வேட்பாளரும்  இருவரும் சமமான வாக்குகள் பெற்று இருந்தனர்.

இதை தொடர்ந்து குலுக்கல் முறையில் தேர்வு செய்ய அதிகாரிகள் முடிவு செய்தனர்.இந்த குலுக்கல் முறைக்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனால் மங்களூர் ஒன்றியத்திற்கு தேதி குறிப்பிடாமல் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

author avatar
murugan