#Breaking:ஒரு மணி நேரத்தில் 1000 பக்தர்களுக்கு அனுமதி – பழனி தேவஸ்தானம்…!

ஜூலை 5 ஆம் தேதி முதல் ஒரு மணி நேரத்தில் 1000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று  பழனி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் நோய்த் தொற்று பரவல் குறைந்துள்ளதைத் தொடர்ந்து 5-7-2021 முதல், அனைத்து மாவட்டங்களிலும் ஒரே வகையான தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை வரும் 12-ஆம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தளர்வுகளின்படி,அனைத்து வழிபாட்டுத் தலங்களும் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.ஆனால், திருவிழாக்கள் மற்றும் குடமுழுக்கு நடத்த அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,ஜூலை 5 ஆம் தேதி முதல் ஒரு மணி நேரத்தில் 1000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று பழனி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

மேலும், https://palanimurugan.hrce.tn.gov.in/hrcehome/index_temple.php?tid=32203 என்ற இணையதளத்தில் பதிவு செய்து பின்னர் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் வரவேண்டும் என்றும்,இணைய வசதி இல்லாத கிராமப் புறத்தை சேர்ந்தவர்கள் 04545-242683 என்ற எண்ணில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

அவ்வாறு வரும் அழைப்புகளில் காலை 10 மணி முதல் 1 மணி வரையிலும்,பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை 200 அழைப்புகள் மட்டுமே ஏற்கப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

அதன்படி,திங்கள் முதல் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி காலை 6 மணி முதலஎனவே,பக்தர்கள் படிக்கட்டுகள் மற்றும் யானை பாதையை பயன்படுத்தி மலை ஏறுமாறு தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.