பாராளுமன்ற தேர்தல்…மக்களிடம் கருத்து கேட்கும் நடிகர் பிரகாஷ் ராஜ்…!!

நடிகர் பிரகாஷ் ராஜ் கடந்த சில மாதங்களாக தீவிர அரசியல் பேசி வருகின்றார். அடிக்கடி அரசை கண்டித்து ட்வீட் செய்து தந்து கருத்துக்களை பதிவிடுகின்றார். மத்திய மோடி அரசை கடஉமையாக விமர்சிக்கிறார்.இந்நிலையில் அரசியலில் ஈடுபடாமல் , கட்சியை தொடங்காமல் தீவிரமாக அரசியல் பேசிவந்த நடிகர் பிரகாஷ்ராஜை பலரும் அவரவர் கட்சியில் இணைக்க முற்பட்டனர்.

இந்நிலையில் கடந்த 1ஆம் தேதி வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடப்போவதாக அறிவித்தார்.இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலில் நிற்கும் அவர் மக்களிடம் கருத்துக்களை கேட்கும் பிரசார பயணத்தை மேற்கொண்டுள்ளார். சுமார் 8 நாட்கள் ஆட்டோவில் சென்று மக்களின் பிரச்சனைகளை கேட்க இருக்கின்றார்.

இது குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவிக்கையில் மக்களுக்கு என்னென்ன பிரச்னை இருக்கின்றது என்று யாராலும் கண்டு பிடிக்க முடியாது . மக்கள் படும் பிரச்சனைகள் , அவலங்கள் அவர்களுக்கு தான் தெரியும் . எனவே தான் அவர்களிடம் சென்று அவர்களின் பிரச்சனையை போக்கும் வகையில் நல்ல திட்டங்களை உருவாக்க முடியும் என்று அவர் தெரிவித்தார் .

author avatar
Dinasuvadu desk

Leave a Comment