பாஜகவின் லட்சுமண ரேகையை மீறுவோர் மீது நடவடிக்கை உறுதி…! யாரையும் விடப்போவதில்லை – அண்ணாமலை பேட்டி

தற்போதைய நடவடிக்கை ஆரம்ப கட்டம் தான். வரும் காலத்தில் களையெடுப்பது உறுதி என அண்ணாமலை பேட்டி. 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், பாஜகவின் லட்சுமண ரேகையை மீறுவோர் மீது நடவடிக்கை உறுதி. யாரையும் விடப்போவதில்லை; தற்போதைய நடவடிக்கை ஆரம்ப கட்டம் தான். வரும் காலத்தில் களையெடுப்பது உறுதி.

சூர்யா சிவா தகாத முறையில் பேசியுள்ளார். இன்று மாலைக்குள் அறிக்கை கேட்டுள்ளேன். காயத்ரி ரகுராம் விவகாரத்தில் கருத்து கூற விரும்பவில்லை; தவறு செய்தவர்கள் மீது உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை பாஜக வரவேற்றது. முழுமையாக ஆதரிக்கிறது; அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment