விவசாயத்தை வாழ வைக்க நூறு நாள் வேலை திட்டத்தை ஒழிக்க வேண்டும்…! – சீமான்

விவசாயத்தை வாழ வைக்க வேண்டும் என்றால், நூறு நாள் வேலைத்திட்டத்தை ஒழிக்க வேண்டும்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், விழுப்புரம் மாவட்டம் நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இந்த கூட்டத்தின் பின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், வேளாண் சட்டத்தை எதிர்த்து நாங்கள் போராடுவோம். வேளாண் சட்டம், வேளாண் குடிக்கு மட்டும் பாதிப்பு என்பது பைத்தியக்காரத்தனம். அது ஒட்டுமொத்த நாட்டுக்கும், மக்களுக்கும் எதிரானது.

விவசாயத்தை வாழ வைக்க வேண்டும் என்றால், நூறு நாள் வேலைத்திட்டத்தை ஒழிக்க வேண்டும். மனித ஆற்றலை உழைப்பில் ஈடுபடுத்த உற்பத்தியை பெருக்கி லாபம் ஈட்டுகின்ற நாடு எதுவோ? அதுதான் வாழும். வளரும் மனிதனை உழைப்பில் இருந்து வெளியேற்றி விட்டு சோம்பி இருக்கவைத்து கூலி கொடுப்பது என்பது மிகவும் ஆபத்தான போக்கு என்று தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.