பள்ளிக்கு வராத மாணவன்..! மாணவனின் வீட்டில் தர்ணா போராட்டம் நடத்திய ஆசிரியர்!

குடும்ப வறுமையின் காரணமாக பள்ளிக்கு வராத மாணவனின் வீட்டிற்கு சென்று தர்ணாவில் ஈடுபட்ட ஆசிரியர். 

தெலுங்கானாவில் நவீன் என்ற மாணவன் வீட்டு வறுமையின் காரணமாக பள்ளிக்கு செல்லாமல் வேலைக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் இதனை அறிந்த ஆசிரியர் பிரவீன் மாணவனின் வீட்டிற்கு சென்று தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.

மேலும், கல்வியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துக் கூறி மாணவனை மீண்டும் படிக்க வருமாறு அழைத்துள்ளளார்.  பள்ளிக்கு வராதா மாணவனின் வீடு தேடி சென்று பள்ளிக்கு வருமாறு அழைத்த ஆசிரியருக்கு  பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment