அதிமுகவை ஒருங்கிணைப்பதில் அருகில் நெருங்கி விட்டோம் – சசிகலா பேட்டி

அதிமுகவை ஒருங்கிணைப்பதில் அருகில் நெருங்கி விட்டோம் என சசிகலா பேட்டி. 

இன்று காலை பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்-ஐ சந்தித்து பேசினார். அதனை தொடர்ந்து இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி லித்திருந்தார்.

அப்போது பேசிய அவர், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் என இருவரையும் சந்தித்தோம் . எங்கள் கட்சி தலைவர் ஜே.பி.நட்டா அறிவுறுத்தலின் பெயரில் அவர்களை சந்தித்து ஆலோசித்தோம். இருவரையும் ஒன்றிணைக்க முயற்சி செய்தோம் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், சென்னையில் வி.கே.சசிகலா அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், அதிமுகவை ஒருங்கிணைப்பதில் அருகில் நெருங்கி விட்டோம். அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதை தான் நான் எப்போதும் சொல்லி வருகிறேன். தனித்தனியாக இருந்தால் அது அதிமுகவிற்கு நல்லதல்ல. அதைத்தான் சொல்ல முடியும் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment