இந்தியாவில் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் – ராகுல் காந்தி

ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி இளைஞர்களுக்கு வேலை எங்கே? – காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கேள்வி.

கர்நாடக மாநிலம் பல்லாரியில் நடந்த கட்சி கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, இந்தியாவில் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவேன் என்று பிரதமர் கூறினார். அந்த வேலைகள் எங்கே போனது? மாறாக கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலையிழந்துள்ளனர்.

கர்நாடகாவில் 2.5 லட்சம் அரசுப் பணியிடங்கள் ஏன் காலியாக உள்ளன? போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக வேண்டுமானால் ரூ.80 லட்சம் செலுத்தி ஒருவர் ஆகலாம். காசு இருந்தால் கர்நாடகாவில் அரசு வேலை வாங்கலாம், இல்லையென்றால் வாழ்நாள் முழுவதும் வேலையில்லாமல் இருக்கலாம். இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை உச்சத்தில் உள்ளது என பாரத் ஜோடோ யாத்திரையின் போது பரவலான பணவீக்கம் மற்றும் வேலையின்மை போன்ற பிரச்சனைகள் குறித்து உரையாற்றினார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment