ஓபிஎஸ் பண்ணை வீட்டில் திருடர்கள் கைவரிசை..!

ஓபிஎஸ் பண்ணை வீட்டில் திருடர்கள் டிவியை திருடி  சென்றுள்ளனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசப்பட்டியில் ஓபிஎஸ்-ன் பண்ணை வீடு ஒன்று உள்ளது. ஓபிஎஸ் இந்த வீட்டில் அவ்வப்போது தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவது, ஓய்வெடுப்பது என வழக்கமாக இருந்தது.

இந்த நிலையில், பண்ணை வீட்டின் பின்புறம் மதில் சுவரைத் தாண்டி வந்த திருடர்கள் ஓபிஎஸ் ஓய்வெடுக்கும் மேல் தளத்தில் உள்ள மதில் சுவரை தாண்டி வந்த திருடர்கள், உள்ளே நுழைந்து பீரோவை உடைத்து பார்த்துள்ளனர். ஆனால், பீரோவில் நகை பணம் இல்லாத எதுவும் இல்லாத காரணத்தால் அங்கு இருந்த டிவியை திருடி சென்றுள்ளனர்.

 இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓபிஎஸ் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment