மாநிலக் கல்வி கொள்கை – குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

மாநில கல்விக்கொள்கை குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது

மாநில கல்விக்கொள்கை குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து கல்விக்கொள்கையை வடிவமைக்க வேண்டும். உலகளாவிய கல்வி, தேவைக்கேற்ப வளரிளம் பருவத்தினருக்கான கல்வி, தொழில்நுட்பங்கள் போன்றவற்றை கருத்தில் கொண்டு கல்விக்கொள்கையை வடிவமைக்க வேண்டும்.

வேலைவாய்ப்புக்கேற்ற பாடத்திட்டத்தை வடிவமைக்க வேண்டும் சமத்துவமான கல்வி தரப்பட வேண்டும் தேர்வு முறைகளில் சீர்திருத்தம் கொண்டுவர வேண்டும் பள்ளிப்படிப்பை முடிப்போர் அனைவரும் உயர்கல்வியை தொடரும் வகையில் கல்விக்கொள்கை அமைய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment