#BREAKING : பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பாரதி பெயரில் தமிழ் ஆய்வு இருக்கை அமைக்கப்படும் – பிரதமர் மோடி

உத்திரபிரதேச மாநிலம், வாரணாசியில் பனராஸ் இந்து பல்கலைக்கழகத்தில் மகாகவி பாரதியாரின் பெயரில் தமிழ் ஆய்வு இருக்கை  அமைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவிப்பு. 

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், உத்திரபிரதேச மாநிலம், வாரணாசியில் பனராஸ் இந்து பல்கலைக்கழகத்தில் மகாகவி பாரதியாரின் பெயரில் தமிழ் ஆய்வு இருக்கை  அமைக்கப்படும் என்று, பாரதியாரின் 100-வது நினைவு நாளான இன்று அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பின் மூலமாக வடஇந்தியாவில் தமிழ் தொடர்பான விரிவான ஆய்வு இனி வரக்கூடிய நாட்களில் நடத்தப்படும் என்றும், தமிழ் படிக்கவும், தமிழ் ஆய்வு மாணவர்களுக்கும் பாரதி  தமிழ் ஆய்வு இருக்கை பயன்படும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.