#BREAKING : தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னையில், காவேரி மருத்துவமனையில், தனியார் மருத்துவமனைகளில் இலவச கொரோனா தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த, தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தற்போது, தொற்று பாதிப்பு குறித்து வரும் நிலையில், தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வண்ணம் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னையில், காவேரி மருத்துவமனையில், தனியார் மருத்துவமனைகளில் இலவச கொரோனா தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக 36,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மேலும், தனியார் மருத்துவமனைகளில் தனியார் பங்களிப்பு நிதியுதவியுடன் கொரோனா தடுப்பூசி போடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.