#BREAKING: கலப்பு இரட்டையர் வில்வித்தை – தீபிகா ,பிரவீன் ஜாதவ் தோல்வி..!

கலப்பு இரட்டையர் வில்வித்தை காலிறுதி போட்டியில் தென் கொரியா இணையிடம் இந்தியா இணை தோல்வியை தழுவியது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று 32-வது ஒலிம்பிக் போட்டி தொடங்கியது. இந்த ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பாக 127 வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் வில்வித்தை கலப்பு அணிகளுக்கான காலிறுதி தகுதி சுற்று இன்று காலை நடைபெற்றது. இப்போட்டியில், இந்தியாவின் தீபிகா குமாரி – பிரவீன் ஜாதவ் ஆகியோர் சீன தைபியின் சிஹ்-சுன் டாங் மற்றும் சியா-என் ஆகியோருக்கு எதிராக  மோதியது. இதில் இந்தியா 5-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

இந்நிலையில், கலப்பு இரட்டையர் வில்வித்தை காலிறுதி போட்டியில் தீபிகா குமாரி – பிரவீன் ஜாதவ் இணை, தென் கொரியாவின் ஆன் சான் – கிம் ஜே  டியோக் இணையுடன் மோதியது. இதில், 2-6 என்ற புள்ளி கணக்கில் தீபிகா குமாரி – பிரவீன் இணை தோல்வியை தழுவியது.

author avatar
murugan