ஒலிம்பிக் வில்வித்தை – காலிறுதியில் தீபிகா குமாரி போராடி தோல்வி..!

டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை தனிநபர் போட்டியின்,காலிறுதி சுற்றில்  இந்திய வீராங்கனை தீபிகா குமாரி தோல்வியுற்றுள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32 வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது.அதன்படி,இன்று நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் காலிறுதியின் முந்தைய சுற்றில் உலகின் நம்பர் 1 வீராங்கனையும் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையுமான தீபிகா குமாரி,தரவரிசையில் 8 வது இடத்தில் இருக்கும் ரஷ்ய வீராங்கனை செனியா பெரோவாவை எதிர்கொண்டார். முதல் செட்: இப்போட்டியில்,தீபிகாவுக்கு இணையாக ரஷ்ய வீராங்கனை … Read more

டோக்கியோ ஒலிம்பிக்: வில்வித்தையில் தீபிகா குமாரி காலிறுதிக்கு முன்னேற்றம்….!

டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை தனிநபர் போட்டியில்,காலிறுதியின் முந்தைய சுற்றில் வெற்றி பெற்று இந்திய வீராங்கனை தீபிகா குமாரி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32 வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது.அதன்படி,நேற்று முன்தினம் நடைபெற்ற மகளிர் தனிநபர் வில்வித்தை ரீகர்வ் முதல் சுற்றில் தீபிகா குமாரி,பூடான் வீராங்கனை கர்மாவை எதிர்கொண்டார்.இறுதியில்,மிக எளிதாக 6-0 என்ற கணக்கில் கர்மாவை வீழ்த்தி தீபிகா வெற்றியடைந்தார். காலிறுதியின் முந்தைய சுற்று : மேலும்,இரண்டாவது சுற்றில் அமெரிக்க வீராங்கனை ஜெனிபருடன் கலந்து … Read more

ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் தீபிகா குமாரி காலிறுதிக்கு தேர்வு..!

டோக்கியோவில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் தீபிகா குமாரி காலிறுதிக்கு நுழைந்துள்ளார். இன்று டோக்கியோவில் ஒலிம்பிக் வில்வித்தை போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியாவை சேர்ந்த தீபிகா குமாரி, பிரவீன் ஜாதவ், தருண் தீப் ராய், அதானு தாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களில் ஆண்கள் பிரிவில் பிரவீன் ஜாதவ், தருண் தீப் ராய், அதானு தாஸ் ஆகியோர் பங்கு கொண்டு தோல்வியை அடைந்தனர். மேலும், தனிநபர் சுற்றில் தருண் தீப் ராய் காலிறுதிக்கு செல்லவில்லை. அதற்கு … Read more

#BREAKING: கலப்பு இரட்டையர் வில்வித்தை – தீபிகா ,பிரவீன் ஜாதவ் தோல்வி..!

கலப்பு இரட்டையர் வில்வித்தை காலிறுதி போட்டியில் தென் கொரியா இணையிடம் இந்தியா இணை தோல்வியை தழுவியது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று 32-வது ஒலிம்பிக் போட்டி தொடங்கியது. இந்த ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பாக 127 வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். டோக்கியோ ஒலிம்பிக்கில் வில்வித்தை கலப்பு அணிகளுக்கான காலிறுதி தகுதி சுற்று இன்று காலை நடைபெற்றது. இப்போட்டியில், இந்தியாவின் தீபிகா குமாரி – பிரவீன் ஜாதவ் ஆகியோர் சீன தைபியின் சிஹ்-சுன் டாங் மற்றும் சியா-என் … Read more

டோக்கியோ ஒலிம்பிக்:வில்வித்தையில் கால் இறுதிக்கு தகுதி பெற்ற இந்தியா…!

டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் வில்வித்தை போட்டியில் தைபியினை தோற்கடித்து, இந்தியா காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று 32-வது ஒலிம்பிக் போட்டியின் திறப்பு விழாவானது நடைபெற்றது.இந்த ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பாக 127 வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில்,டோக்கியோ ஒலிம்பிக்கில் வில்வித்தை கலப்பு அணிகளுக்கான காலிறுதி தகுதி சுற்று இன்று காலை நடைபெற்றது. இப்போட்டியில்,இந்தியாவின் தீபிகா குமாரி மற்றும் பிரவீன் ஜாதவ் ஆகியோர் சீன தைபியின் சிஹ்-சுன் டாங் மற்றும் சியா-என் ஆகியோருக்கு எதிராக … Read more

டோக்கியோ ஒலிம்பிக் ;வில்வித்தை தகுதி சுற்றில் 9 வது இடத்தை பிடித்த தீபிகா குமாரி..!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் வில்வித்தை தகுதி சுற்றில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி 9 வது இடத்தை பிடித்துள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டியின் தொடக்க நிகழ்வு இன்று மாலை 4.30 மணிக்கு ஆரம்பமாகிறது.இந்த ஒலிம்பிக் போட்டியில் 205 நாடுகளைச் சேர்ந்த 11,000 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.மேலும்,இந்தியாவில் இருந்து மொத்தம் 127 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.இதற்கிடையில்,ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்று நடைபெற்று வருகிறது. தகுதிநிலை தரவரிசை சுற்று: இந்நிலையில்,இன்று நடைபெற்ற மகளிர் தனிநபர் தகுதிநிலை … Read more