இன்று முதல் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி…!

  • இன்று முதல் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி.
  • டாஸ்மாக் மேலாண் நிர்வாகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஜூன்-14ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடைவதை அடுத்து, ஜூன் 21-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகிறது. இதனையடுத்து, டாஸ்மாக் மேலாண் நிர்வாகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.