தமிழகத்தில் தடுப்பூசி பணி மீண்டும் தொடக்கம்..!

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி இல்லாத காரணத்தால் கடந்த 3 நாள்களாக  நிறுத்தப்பட்டிருந்த தடுப்பூசி பணி  மீண்டும் தொடங்கியுள்ளது.

தமிழகத்திற்கு 85 ஆயிரம் தடுப்பூசிகள் ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து விமானம் மூலமாக நேற்று சென்னை வந்தடைந்தது. இந்த தடுப்பூசிகள் மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டது.

கொரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லாத காரணத்தால் கடந்த 3 நாள்களாக தமிழகத்தில் பல இடங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், மதுரை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தடுப்பூசி பணி  மீண்டும் தொடங்கியுள்ளது.

இந்த மையங்களில் கோவேக்சின் இரண்டாம் தவணை தடுப்பூசி மட்டுமே செலுத்தப்பட்டு வருகிறது.

 

author avatar
murugan