வாலி திரைப்படத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா..??

வாலி திரைப்படத்தில் சிம்ரன் நடித்த கதாபாத்திரத்தில் முதன் முதலாக நடிக்கவிருந்தவர் நடிகை மீனா என்று கூறப்படுகிறது. 

கடந்த 1999 ஆம் ஆண்டு இயகுனர் எஸ்.ஜே சூர்யா இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் வாலி.இந்த படத்தில் சிம்ரன், ஜோதிகா, விவேக், தேவி ப்ரியா, போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தேவா இசையமைத்திருந்தார்.

இந்நிலையில், இந்த திரைப்படத்தில் சிம்ரன் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தவர் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, இந்த திரைப்படத்தில் நடிகை சிம்ரன் நடித்த கதாபாத்திரத்தில் முதன் முதலாக நடிகை மீனா தான் நடிக்கவிருந்தாராம், ஆனால் அப்போது மீனா மிகவும் பிசியாக பல திரைப்படங்களில் கமிட் ஆகி இருந்தார். இதனால் கால்ஷீட் இல்லாத காரணத்தால் மீனாவால் நடிக்கமுடியாமல் போகிவிட்டதாக கூறப்படுகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.