#ElectionBreaking : மதிமுக போட்டியிடும் 6 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது…!

6 தொகுதிகள் அடங்கிய தொகுதி பட்டியல் உடன்படிக்கை ஒப்பந்தத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் வைகோ ஆகியோ கையெழுத்திட்டனர். 

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன், கங்கிரஸ், விசிக, மதிமுக உட்பட பல கட்சிகள் கூட்டணி கட்சிகளாக அங்கம் வகிக்கின்றனர். இந்நிலையில், நேற்று சில கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், நேற்று இரவு சென்னை அறிவாலயம் வந்தார்.

இந்நிலையில், மதிமுக-வுக்கு, மதுராந்தகம், சாத்தூர், பல்லடம், மதுரை தெற்கு, வாசுதேவநல்லூர், அரியலூர் உள்ளிட்ட  தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த 6 தொகுதிகள் அடங்கிய தொகுதி பட்டியல் உடன்படிக்கை ஒப்பந்தத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் வைகோ ஆகியோ கையெழுத்திட்டனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.