காஷ்மீர்-குமரி முன்னால் ராணுவ வீரரின் இருசக்கர வாகன பயணம் நிறைவு..,

கன்னியாகுமரி: ஹைதராபாத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான எம்.ஏ.கரீம் நாட்டின் அமைதி, மதநல்லிணக்கம், பசுமை இந்தியா, இளைஞர்கள் வாகனப் பாதுகாப்பு போன்ற  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 11.3.2018ல் ஜம்மு காஷ்மீர் லடாக் பகுதியில் இருந்து இரு சக்கர வாகன பயணத்தை தொடங்கினார்.

டெல்லி, பஞ்சாப், உத்ரகாண்ட், மத்தியப் பிரதேசம், கர்நாடகம், ஆந்திரம், தெலுங்கானா, கேரளம் உள்ளிட்ட மாநிலங்கள் வழியாக கடந்து  தமிழகத்தில் உள்ள  கன்னியாகுமரி மாவட்டம் வந்தார். இதற்காக 4,500 கி.மீ தொலைவினை 20 நாள்களில் கடந்து  தனது பயணத்தை நிறைவு செய்தார்.

இந்த கால இளைஞர்கள் மிக அதிக வேகத்தில் செல்கின்றனர். இதன் காரணமாக விபத்துக்கள் அதிக அளவில் ஏற்படுகின்றன. இளைஞர்கள் தங்களது குடும்பத்தினை நினைவில் கொண்டு மிதமான வேகத்தில் செல்ல வேண்டும் என்றும் அதிகமான மரங்களை வைத்து மழை பெற செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment