நாம் இனி உச்சரிக்க வேண்டிய மந்திரம் vocal for local – பிரதமர் மோடி

நாம் இனி உச்சரிக்க வேண்டிய மந்திரம் vocal for local.

நாடு முழுவதும் இன்று 74-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது. மோடி செங்கோட்டையில், 7-வது முறையாக தேசிய கொடியை ஏற்றி மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

அவர் பேசுகையில், கொரோனா காலத்தில்  இந்தியாவில் அந்நிய முதலீடுகள் அதிகரித்துள்ளன என்றும், உலகின் மிகப்பெரிய நிறுவனங்கள் இந்தியா மீது நம்பிக்கை வைத்துள்ளன என்றும், நமது சீர்திருத்தங்களால் பல நாடுகள் நம் மீது நம்பிக்கையை அதிகரித்துள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் தயாரிப்புகளுக்கு குரல் கொடுப்போம் என்பது இனி நமது மந்திரம் என்றும், உலகப் பொருளாதாரத்தில் இந்திய பங்களிப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.