ஆன்லைன் வகுப்பில் கலந்து கொண்ட மாணவி! திடீரென கணினியை நோக்கி பாய்ந்த துப்பாக்கி குண்டுகள்!

ஆன்லைன் வகுப்பில் கலந்து கொண்ட மாணவி! திடீரென கணினியை நோக்கி பாய்ந்த துப்பாக்கி குண்டுகள்!

திடீரென கணினியை நோக்கி பாய்ந்த துப்பாக்கி குண்டுகள்.

அமெரிக்காவில் இண்டியன்டவுன் பகுதியில், 10 வயது சிறுமி ஒருவர் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொண்டிருந்தார். அப்போது அந்த சிறுமியின் வீட்டில் ஏதோ அசம்பாவிதம் நிகழ போவதை உணர்ந்த ஆசிரியர், அவரது வீடியோவை மட்டும் மியூட் செய்துள்ளார்.

அதன் பின் தான் சிறுமியின் தாயாருக்கும், அவரது முன்னாள் காதலருக்கும் கடுமையான வாக்குவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், அவரது முன்னாள் காதலர், சிறுமியின் தாயாரை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இதனையடுத்து அந்த சிறுமி ஆன்லைன் வகுப்பிற்காக பயன்படுத்திய கணினியின் இது துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த சிறுமியின் தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும், இவரின் முன்னாள் காதலரான வில்லியம்சை போலீசார் கைது செய்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube