குழந்தை வரம் அளிக்கும் கண்ணூர் மாரியம்மன்- காரியம்மன் ஆலயம்!

  • குழந்தை வரம் வேண்டி இந்த சன்னதியில் தொட்டில் கட்டி போட்டு வேண்டினால் குழந்தை வரம் கிடைக்கும். 
  • அதே போல சரியாக பேச்சு வராதவர்கள் இந்த சன்னதியில் மணி கட்டி, மாவிளக்கு ஏற்றி வழிபட்டால் பேச்சு வரும் என்பதும் நம்பிக்கை.

வெள்ளிக்கிழமை அம்மனுக்கு உகந்த நாள். இந்நாளில் பக்தர்கள் அம்மன் சன்னதிக்கு சென்று வழிபடுவது அதிகம். அப்படிப்பட்ட இந்த வெள்ளிக்கிழமையில் குழந்தை வரமும், பேச்சு வரமும் அளிக்கும் கண்ணூர் மாரியம்மன் – காரியம்மன் பற்றி காணாலாம்.

சேலம் மாவட்டம் கண்ணூர் எனும் ஊரில் அமைந்துள்ளது இந்த சிறப்பு வாய்ந்த அம்மன் ஆலயம். இந்த ஆலயத்தின் கருவறையில் வலது புறத்தில் மாரியம்மன், இடது புறத்தில் காரியம்மன் என இரு அம்மன் காட்சியளிக்கின்றனர்.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த அம்மன் சிலை முன்பு தொட்டில் கட்டி போட்டு, சஞ்சீவி தீர்த்தத்தை தெளித்துவிட்டு தொட்டிலை ஆட்டிவிட்டு மனதார வேண்டிக்கொண்டால் கண்டிப்பாக குழந்தை வரம் கிட்டும் என்பது ஐதீகம்.

அதே போல சரியாக பேச்சு வராதவர்கள் இந்த சன்னதி வந்து மணி கட்டி, மாவிளக்கு பூஜை செய்தால் கண்டிப்பாக பேச்சு வரம் கிட்டும் என்பதும் ஐதீகம்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.