உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெற்றார் சிதம்பரம்

சிபிஐ காவல் மற்றும் கைதுக்கு எதிரான ப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனு திரும்ப பெறப்பட்டுள்ளது.

ஐஎன்எக்ஸ்  மீடியா வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்யாமலிருக்க தடைகோரி முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் தரப்பில்  உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இன்று இந்த வழக்கில் முன்ஜாமின் வழங்க முடியாது என்று  உச்ச நீதிமன்றம் தெரிவித்து  ,முன்ஜாமின் மனுவை  தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது.மேலும் அமலாக்கத்துறை வழக்கில் கீழமை நீதிமன்றங்களை அணுகலாம் என்று அறிவுறுத்தியது.

இந்த நிலையில்  சிபிஐ காவல் மற்றும் கைதுக்கு எதிரான ப.சிதம்பரத்தின் மேல்முறையீட்டு மனு திரும்ப பெறப்பட்டுள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வழக்கை திரும்ப பெற உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.