உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது-அமைச்சர் விஜயபாஸ்கர்

இந்தியாவிலேயே உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிக்கும் விதமாக புதுக்கோட்டையில் 10 ஆயிரம் பேர் கலந்து கொண்ட  மாரத்தான் போட்டியை தொடங்கிவைத்தார்.
இதன்  பின்னர் செய்தியாளர்களிடம் அவர்  பேசுகையில்,இந்தியாவிலேயே உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது . உடல் உறுப்பு தானத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவதே தமிழக அரசின் நோக்கம் ஆகும்.மேலும் மாணவர்கள், தொண்டு நிறுவனங்கள் மூலம் மக்களிடம் கொண்டு போய் சேர்ப்போம் என்றும் தெரிவித்தார்.