7 வயது சிறுவனுக்கு சாக்லேட் தருவதாக கூறி சில்மிஷம் செய்த பெண்ணுக்கு 10 ஆண்டு சிறை!

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த சாரங்கபாணி வயது (42). இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 7 வயது சிறுவக்கு  சாக்லெட் வாங்கித் தருவதாக கூறி அழைத்து சென்று சில்மிஷம் செய்துள்ளார்.

இதை தொடர்ந்து அந்த சிறுவனின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பெயரில் எம் கே பி நகர் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாரங்கபாணியை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை சென்னை மகளிர் கோர்ட்டில் நீதிபதி மஞ்சுளா முன்னிலையில் நடந்தது.

அரசு தரப்பில்  வக்கீல் ஸ்ரீலேகா வாதாடினார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மஞ்சுளா குற்றம் சாட்டப்பட்ட பெண் சாரங்கபாணிக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் , ரூபாய் 30 ஆயிரம் அபராதமும் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.

author avatar
murugan