முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சவால் விட்ட மு.க.ஸ்டாலின்….

  • மத்தியில் திமுக ஆட்சியில் இருந்த போது என்ன செய்யவில்லை என்று அதிமுக கூறினால் அதற்கு விளக்கம் தர தயார்.

மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நெருங்கி வருகிற நிலையில், தமிழகத்தில் தேர்தல் ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மத்தியில் ஆட்சியில் இருந்த போது மக்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்று கூறியுள்ளார். இதனையடுத்து, அரூர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஸ்டாப்களின் அவர்கள் எடப்பாடியின் கேள்விக்கு பத்தி கூறியுள்ளார்.

அப்போது அவர் கூறியதாவது, மத்தியில் திமுக ஆட்சியில் இருந்த போது என்ன செய்யவில்லை என்று அதிமுக கூறினால் அதற்கு விளக்கம் தர தயார் என்றும், மத்தியில் திமுக சுட்டிக்காட்டும் ஆட்சி அமைந்தால், பெட்ரோல் டீசல் விலை குறையும் எனவும் சிலிண்டர் விலை குறைக்கப்படும் எனவும் ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும், திமுக என்ன செய்யவில்லை என பட்டியலிட்டால் விளக்கம் தர தயார் இருப்பதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment