அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கும் ஜெ.தீபா….

  • ஜெ.தீபா நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
  • அதிமுகவோடு இணையும் பேச்சுவார்த்தை தேர்தலுக்கு பிறகு தொடரும்.

வரும் ஏப்ரல் 18-ம்தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான சிறப்பு ஏற்பாடுகள் தமிழகமெங்கும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அனைத்து கட்சிகளும், தங்களது தேர்தல் பணிகளில் முழுவீச்சுடன் களமிறங்கியுள்ளனர்.

இந்நிலையில், அதிமுக மற்றும்திமுக கட்சிகளுக்கு மற்ற கட்சிகளின் ஆதரவு கிடைத்து வருகிறது. தேர்தல் நடைபெற இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில், அதிமுக மற்றும் திமுக கட்சி கூட்டணிகளுக்குள் பல மாற்றங்கள் நடந்தேறிய வண்ணம் உள்ளது.

இதனையடுத்து, ஜெ.தீபா நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், இது குறித்து, சேலத்தில் நடந்த பேரவை பொதுக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக ஜெ.தீபா கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், அதிமுகவோடு இணையும் பேச்சுவார்த்தை தேர்தலுக்கு பிறகு தொடரும்  என்றும்,அதிமுக தலைமையிலிருந்து அழைப்பு வந்தால் பரப்புரை மேற்கொள்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment