” அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு ” தலைமை தேர்தல் அதிகாரியுடன் ஆலோசனை…!!

  • அதிமுக + பாஜக , திமுக + காங்கிரஸ் கட்சியின் கூட்டணி முடிவாகி தொகுதி பங்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
  • மக்களவை தேர்தல் நடைபெறும் சூழலில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருகையில் மத்தியில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜக_வும் , காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகின்றது.மாநிலத்துக்கு மாநிலம் மாநில கட்சிகளுடன் கூட்டணி குறித்த வியூகங்களை வகுத்து வருகின்றனர்.

தமிழகத்தில் அதிமுக + காங்கிரஸ் , திமுக + காங்கிரஸ் கூட்டணி முடிவாகி தொகுதி பங்கீடு நடைபெற்றுள்ளது. இன்னும் சில கட்சிகள் அந்தந்த கூட்டணி தலைமை கட்சிகளிடம் பேசிக்கொண்டு இருக்கின்ற்றனர்.

இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்ய பிரதா சாஹூ நாளை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விதித்துள்ளார்.இதில் வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தல் குறித்து அரசியல் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபடுவர் என்று தெரிகின்றது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment