காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் 2 ராணுவத்தினர் பலி…!!

ஜம்மு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ மேஜர் உள்பட 2 ராணுவத்தினர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லை பகுதியில் உள்ள ராஜோரி மாவட்டத்தில், நவ்ஷேரா செக்டாரில் உள்ள லாம் பகுதியில் ராணுவ வீரர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தீடீரென அங்கு வந்த பயங்கரவாதிகள் சிலர், ராணுவ வீரர்களை குறிவைத்து வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.இந்த கொடூர தாக்குதலில் ராணுவ மேஜர் உள்பட 2 வீரர்கள் பலியாகினர். மேலும் இரண்டு வீரர்கள் காயமடைந்தனர். பயங்கரவாதிகள் தாக்குதலை தொடர்ந்து அந்த பகுதி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment