ரஜினி, கமல் தேர்தலில் போட்டியிட்டாலும் அதிமுக ஓட்டு வங்கிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது…!அமைச்சர் ஜெயக்குமார்

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கலாம் என பாஜக நினைத்தாலும் அதனை முடிவு செய்ய வேண்டியது மக்கள் தான் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், ரஜினி, கமல் தேர்தலில் போட்டியிட்டாலும் அதிமுக ஓட்டு வங்கிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.மிழக அரசு பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது, மக்களும் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க வேண்டும்.
அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை இருக்கும்போது, பாஜகவிற்கும் அந்த ஆசை இருக்கிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Leave a Comment