தமிழகத்தில் 9,82,487 பேர் ஊரடங்கு உத்தரவை மீறியதாக கைது செய்யப்பட்டுள்ளனர்!

தமிழகத்தில் 9,82,487 பேர் ஊரடங்கு உத்தரவை மீறியதாக கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் சற்றும் குறையாமல் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், தமிழகத்திலும் லட்சக்கணக்கானோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், தமிழக அரசு இதற்கான பாதுகாப்பு நடவடிக்கையாக கடந்த சில மாதங்களாக ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளது.

மக்களுக்காக சில தளர்வுகளை அரசு அறிவித்திருந்தாலும் சில கட்டுப்பாடுகளையும் விதித்து உள்ளது. இந்நிலையில், இந்த ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை தமிழகம் முழுவதிலும் 9,82,487 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 6,87,753 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 8,88,350 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து  21,09,57,668 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

author avatar
Rebekal