97 வயது மூதாட்டி கொரோனாவை வீழ்த்தி, வீடு திரும்பினார்.!

பிரேசில் நாட்டை சேர்ந்த 97 வயது மூதாட்டி கொரோனாவை வீழ்த்தி, பூர்ண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

உலக முழுவதும் சுமார் 200 நாடுகளில் பரவி இருக்கும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் பாதிப்பும், உயிரிழப்புக்கும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதன் அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகள் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த திணறி வருகிறது. இந்த வைரஸ் அதிகமாக 60 வயதிற்கு மேல் இருப்பவர்களை தாக்கி உயிரை கொன்று விடும் என்ற எண்ணம் மக்களிடையே நிலவி இருக்கும் வேளையில், அது உண்மை இல்லை என்று தற்போது நிகழ்ந்துள்ள சம்பவம் நிரூபித்துள்ளது. பிரேசில் நாட்டை சேர்ந்த 97 வயது மூதாட்டி கொரோனாவை வீழ்த்தி, பூர்ண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில்,, பிரேசிலில் கொரோனா வைரசால் 22,318 பேர் பாதிக்கப்பட்டு, 1,230 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 97 வயது மூதாட்டி கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளது, மற்ற நோயாளிகளுக்கு மன தைரியத்தை வரவழைத்துள்ளது. முன்னதாக அவர் குணமாகி வீடு திரும்பும் போது மருத்துவமனை ஊழியர்கள் இருபுறமும் அணிவகுத்து கைதட்டி உற்சாகப்படுத்தி அந்த மூதாட்டியை அனுப்பி வைத்தனர். இதுபோன்று 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்