குட்டி தமிழ்நாடு 'மும்பை தாராவி'யில் வேகமாக பரவும் கொரோனா.!

குட்டி தமிழ்நாடு 'மும்பை தாராவி'யில் வேகமாக பரவும் கொரோனா.!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகபட்சமாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. 

அம்மாநிலத்தில், மும்பை மாநகரத்தில் உள்ள தமிழர்கள் அதிகம் வசிக்கும், மக்கள் நெருக்கமாக இருக்கும் தாராவி பகுதியில் தற்போது கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. 

நேற்று ஒரு நாளில் மட்டும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால், அங்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 43-ஆக உயர்ந்துள்ளது. மேலும் இப்பகுதியில் மட்டும் 5 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube