பிரேசிலில் ஒரே நாளில் 85 ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று..!

பிரேசில் நாட்டில் ஒரே நாளில் 85,149 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாமிடத்திலும், பிரேசில் மூன்றாமிடத்திலும் உள்ளது. ஆனால், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் உலகத்தில் பிரேசில் 2 ஆம் இடத்தில் உள்ளது. கொரோனா தொற்று காரணமாக அந்நாட்டு அதிபர் ஜெயீர் போல்சனரோ மீது கடும் விமர்சனம் கூறப்பட்டு வருகிறது. ஏனென்றால், தற்போது வரை இவர் ஊரடங்கை அமல்படுத்துவது, முகக்கவசம் அணிவது, சமூக … Read more

பிரேசிலில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,63,427 ஆக உயர்வு!

பிரேசிலில் இன்று 6,760 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதையடுத்து, அந்நாட்டில் கொரோனோவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,63,427 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், அந்த வைரஸ் தாக்கத்தால் இதுவரை 11,168 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கொரோனா தோற்றால் பலியானோருக்கு 3 நாள் தூக்கத்தை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் : பிரேசிலில் இறப்பு எண்ணிக்கை 5,000ஐ தாண்டியது !

கொரோனா வைரஸ் : பிரேசிலில் இறப்பு எண்ணிக்கை 5,000ஐ தாண்டியது ! உலகில் கொரோனா வைரஸின் தாக்கம் நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில் உலக சுகாதார துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் 3,146,651 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 218,177 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 961,833 பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்க முதலிடத்தில் உள்ள நிலையில் பிரேசில் நாட்டில் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், பிரேசிலில் இறந்தவர்களின் … Read more

ஊரடங்கு கருத்து மோதல்.! பிரேசில் சுகாதார அமைச்சர் அதிரடி நீக்கம்.!

கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை மிரட்டி வருகிறது. கொரோனா வைரஸை குணப்படுத்த இதுவரை மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கவில்லை.இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த உலக சுகாதார அமைப்பு தனிமைப்படுத்தல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதன் மூலம் கொரோனவை கட்டுப்படுத்த முடியும் என அறிவுறுத்தி வருகிறது. இதையெடுத்து கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள பல நாடுகள்  ஊரடங்கை பிறப்பித்து மக்கள் வீடுகளில் இருக்க வலியுறுத்தி வருகிறது. ஆனால் பிரேசில் அதிபர் ஜெயீர் போல்சனரோ ஊரடங்கு மற்றும் சமூக இடைவெளி மூலம் … Read more

பிரேசிலில் கொரோனாவை வென்று வீடு திரும்பிய 97 வயது மூதாட்டி.!

உலகையே அச்சுறுத்தி வரும்  கொரோனா வைரசால் இதுவரை உலகம் முழுவதும் 119,718 பேர் உயிரிழந்துள்ளனர்.  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை நெருங்கி உள்ளது. இந்தகொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் முதியவர்கள் என புள்ளி விவரங்கள் கூறுகின்றனர். 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள்  கொரோனாவால் பாதிக்கப்பட்டால் அவர்கள் உயிர் பிழைப்பது கடினம் என கூறப்படுகிறது. ஆனாலும்  சில நாடுகளில் 90 வயதை கடந்த  சில முதியவர்களும் கொரோனாவிற்கு  எதிரான போராட்டத்தில்   மீண்டு வந்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. … Read more

97 வயது மூதாட்டி கொரோனாவை வீழ்த்தி, வீடு திரும்பினார்.!

பிரேசில் நாட்டை சேர்ந்த 97 வயது மூதாட்டி கொரோனாவை வீழ்த்தி, பூர்ண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். உலக முழுவதும் சுமார் 200 நாடுகளில் பரவி இருக்கும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் பாதிப்பும், உயிரிழப்புக்கும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதன் அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகள் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த திணறி வருகிறது. இந்த வைரஸ் அதிகமாக 60 வயதிற்கு மேல் இருப்பவர்களை தாக்கி உயிரை கொன்று விடும் என்ற எண்ணம் மக்களிடையே நிலவி இருக்கும் வேளையில், அது … Read more