இலங்கையில் இருந்து மேலும் 7 பேர் தனுஷ்கோடி வருகை..!

இலங்கையில் இருந்து மேலும் 7 பேர் தனுஷ்கோடி வருகை.

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலை வரும் நிலையில் இலங்கை அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்களில் இறங்கி உள்ளனர். அங்கு மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களின் விலை உயர்ந்துள்ள நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இதனால், அந்த நாட்டு அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது.

இந்த நிலையில் அங்கு வாழ இயலாத சூழலால் இலங்கையிலிருந்து தமிழகம் நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர். ஏற்கனவே, 29 குடும்பங்களைச் சேர்ந்த 110 பேர் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், தனுஷ்கோடி அடுத்த அரிச்சல்முனை பகுதியில் 2 குடும்பங்களைச் சேர்ந்த 2 சிறுவர்கள், 1 சிறுமி உட்பட 7 பேர் தஞ்சம் அடைந்து உள்ளனர். இவ்ரகள் அனைவரும்  இந்திய கடலோரக் காவல் படையால் மீட்கப்பட்டு கரை சேர்ந்தனர். பின் மண்டபம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டனர். விசாரணை முடிந்த பின்னர் அகதிகள் மறுவாழ்வு முகாமில் அனைவரும் தங்கவைக்கப்பட உள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment