CUET தேர்வைத் தவறவிட்ட மாணவர்களுக்கு மறுதேர்வு இல்லை-UGC

CUET-UG 2022 தேர்வைத் தவறவிட்ட மாணவர்களுக்கு மறுதேர்வு இல்லை என்று UGC தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை அன்று மத்தியப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் (CUET) தேர்வு நடத்தப்பட்டது.

அதில் தேர்வு மையங்களுக்கு தாமதமாக வந்து அடைந்ததால், தேர்வு எழுத தவறிய மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்பட மாட்டாது என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) தெரிவித்துள்ளது.

யுஜிசியின் திட்டவட்டமான கூற்று என்னவென்றால், “தேர்வுக்கு ஒரு நாள் முன்னதாக டெல்லியில் ஒன்று உட்பட சுமார் 15 மையங்களை மாற்றுவதற்கான தேசிய தேர்வு நிறுவனத்தின் முடிவு தாமதத்திற்கு காரணம் என்று மாணவர்கள் கூறினாலும்  மறுதேர்வுக்கு தகுதி பெற மாட்டார்கள்” என்று கூறுகிறது.

author avatar
Varathalakshmi

Leave a Comment