கொரோனா வைரஸால் பெங்களூரில் 65 வயது முதியவர் பலி!

சீனாவில் முதலில் பரவிய கொரோனா வைரஸ், அங்கு பல்லாயிரக்கணக்கான  உயிர்களை காவு வாங்கியது. இதனை தொடர்ந்து இந்த நோய் மற்ற நாடுகளையும் தீவிரமாக தாக்கி வருகிறது. இதனால் அனைத்து நாடுகளிலும், இதனை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பெங்களூரு ராஜீவ்காந்தி நெஞ்சக அரசு ஆஸ்பத்திரியில் தனிமையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 65 வயது முதியவர் நேற்று இரவு  உயிரிழந்துள்ளார். கர்நாடகாவில் இதுவரை 181 பேருக்கு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில், அதில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 28ஆக அதிகரித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.