கடந்த 24 மணி நேரத்தில் 51 காவலர்களுக்கு கொரோனா.!

மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 51 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரசால் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. கொரோனா வைரஸில் இருந்து மக்களை காப்பாற்ற மருத்துவர்கள், செவிலியர்கள், துப்பரவுப் பணியாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அயராமல் உழைத்து வருகிறார்கள். இதில் குறிப்பாக காவல்துறை மழை, வெயில் எதும் பார்க்காமல் மக்கள் வெளிய வருவதை தடுத்து, விழிப்புணர்வை ஏற்படுத்தி பாதுகாத்து வருகிறார்கள். இதனால், அவர்களுக்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மஹாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 51 காவலர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்தம் பாதிக்கப்பட்ட காவலர்கள் எண்ணிக்கை 1809 ஆக அதிகரித்துள்ளது. இதில், 1113 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 678 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 18 பேர் பலியாகிள்ளனர். இதனிடையே, மகாராஷ்டிராவில் 50,231 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 1,635 பேர் பலியாகியுள்ளார்.  குணமடைந்தோர் எண்ணிக்கை 14,600 ஆக உள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்