இலங்கையில் இருந்து தமிழகம் வந்த 5 அகதிகள்…!

3 குழந்தைகள் உட்பட 5 பேர் அகதிகளாக தனுஷ்கோடி அருகே ஐந்தாம் தீடையில் தஞ்சமடைந்துள்ளனர்.

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. பலர் தங்களது வயிற்று பசியை போக்க கூட இயலாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இலங்கையில், இருந்து தமிழகத்தை நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர். ஏற்கனவே 100- க்கும் மேற்பட்டோர் தமிழகத்திற்கு வருகை புரிந்துள்ள நிலையில், அவர்கள் சிறப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், தற்போது மேலும் 5 பேர் தமிழக வருகை புரிந்துள்ளனர். 3 குழந்தைகள் உட்பட 5 பேர் அகதிகளாக தனுஷ்கோடி அருகே ஐந்தாம் தீடையில் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களை மீட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment