அக்டோபர் 15ம் தேதிக்குள் சொத்து வரி செலுத்தினால் 5% சலுகை..!

அக்டோபர் 15ம் தேதிக்குள் சொத்து வரி செலுத்தினார் 5% சலுகை அளிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவிப்பு. 

2022- 23 ஆம் நிதி ஆண்டின் முதல் அரையாண்டு கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. முதல் அரையாண்டில் மட்டும் ரூபாய் 945 கோடி மொத்த வரி வசூல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், டந்த முதல் அரையாண்டை விட 208 கோடி ரூபாய் அதிகம். அதே போல் தொழில்வரி ஆனது 248 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அக்டோபர் 15ம் தேதிக்குள் சொத்து வரி செலுத்தினார் 5% சலுகை அளிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment