4,00,00,000 ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார் வைத்திருக்கும் நடிகர்கள் மறந்து விடக்கூடாது…!!நடிகர்கள் மீது நடிகை பாய்ச்சல்…

கேரள வெள்ளத்துக்கு குறைவான நிதி வழங்குவதா?

கேரளா மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பெரிய பாதிப்புக்குள்ளாகி உள்ளது. மக்கள் வீடுகளையும் உடமைகளையும் இழந்து நிற்கிறார்கள். சொந்தபந்தங்களை இழந்து தவிக்கிறார்கள் , இந்நிலையில் நம்முடைய மக்களுக்கு உலகளவில் மக்கள் , வாலிபர்கள் , மாணவர்கள் , குழந்தைகள் , அரசு ஊழியர்கள் மற்றும் நம்மை போன்ற நடிகர்கள் பலரும் உதவும் நிலையில் மலையாள நடிகர்கள் வெள்ள நிவாரணத்துக்கு குறைவான தொகையை வழங்கி உள்ளது வேதனையளிக்கிறது என்று பழம்பெரும் நடிகை ஷீலாவும் மலையாள நடிகர்களை கண்டித்துள்ளார்..

அவர் கூறியதாவது ,

ஒரு படத்துக்கு பல கோடிகள் சம்பளம் வாங்கும் பெரிய நடிகர்கள் மற்றும் இளம் நடிகர்களும் ஒரு மாத சம்பளமாக ரூ.40 லட்சம் வரை பெறும் நகைச்சுவை நடிகர்களும் மழை வெள்ள பாதிப்புக்கு சில லட்சங்கள்தான் கொடுத்துள்ளனர் மலையாள நடிகர்கள். ரூ.4 கோடி ரூபாயில் சொகுசு கார் வைத்திருக்கும் முன்னணி நடிகர்கள் கூட  தொகை சில லட்சங்கள் தான் வழங்கியுள்ளனர்.

கேரள அரசு ஊழியர்கள் ஒரு மாத சம்பளத்தை வெள்ள நிவாரணத்துக்கு கொடுக்கிறார்கள். அவர்களை ஒப்பிடும்போது நடிகர்கள் ஒரு படத்துக்கு வாங்கும் சம்பளத்தை வெள்ள நிவாரணத்துக்கு கொடுக்க வேண்டாமா?என்றும், நம்முடைய  பெயர் புகழ் பணம் எல்லாவற்றையும் கொடுத்தது ரசிகர்கள்தான். அவர்கள் கொடுத்த பணத்தில்தான் நாம் அனைவரும் சொகுசாக வாழ்கிறோம் என்பதை மறந்து விடக் கூடாது என அவர் தெரிவித்தார்…

இப்போது நம்மை வாழ வைக்கும் மக்கள் வீதியில் நிற்கிறார்கள்  எனவே நடிகர்கள் நாமும் அதிக நிதி கொடுத்து உதவி செய்து அவர்கள் பக்கம் நிற்பதுதான் நியாயம். நட்சத்திர கலைவிழா நடத்தியும் நிதி திரட்டலாம்.” இவ்வாறு ஷீலா கூறினார்…

நடிகை ஷீலா 1960 மற்றும் 70-களில் முன்னணி நடிகையாக இருந்தார். அவர் பாசம், பணத்தோட்டம், இதய கமலம், சந்திரமுகி உள்பட பல படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடதக்கது.

DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment