4 தொகுதி இடைத்தேர்தல் : அதிமுகவை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளேன் – பிரேமலதா விஜயகாந்த்

4 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளேன் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் மே தினத்தையொட்டி  கட்சி கொடியை ஏற்றினார் விஜயகாந்த்.அவருடன் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதன் பின்னர் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், 4 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளேன்.

அது எந்த தேதி என்பதை தலைமை கழகம் அறிவிக்கும். தங்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த கோமதி மாரிமுத்துவுக்கு வாழ்த்துகள்.

மேலும் சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து கூறுகையில்,எதிர்க்கட்சி என்றால் சபாநாயகர் மீது குற்றஞ்சாட்டத்தான் செய்வார்கள். அதில் எது உண்மை எது பொய் என்பதை சபாநாயகர், தேர்தல் ஆணையம் தான் முடிவு எடுக்க முடியும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Leave a Comment