4 சட்டப்பேரவை இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

திருப்பரங்குன்றம், சூலூர் உள்ளிட்ட 4 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது .

தமிழகத்தில் மொத்தம் 21 சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளன இதில் 18 தொகுதிகளில் ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய மூன்று தொகுதிகளில் வழக்குகள் காரணமாக தேர்தல் அறிவிக்கப்படவில்லை.

Image result for 3 தொகுதிஅதேபோல் சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதனால் சூலூர் தொகுதியும் காலியாக உள்ளதாக சட்டப்பேரவை செயலர்  அறிவித்தார்.மேலும் தமிழகத்தில்  நான்கு தொகுதிகள் காலியாக உள்ளது.

இந்நிலையில்  மீதமுள்ள நான்கு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.இந்த 4 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 22ம் தேதி தொடங்கும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருப்பரங்குன்றம், சூலூர் உள்ளிட்ட 4 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது .

  • சூலூர்- பொங்கலூர் நா.பழனிசாமி
  • அரவக்குறிச்சி- செந்தில் பாலாஜி
  • திருப்பரங்குன்றம்- பி.சரவணன்
  • ஒட்டப்பிடாரம்- எம்.சி.சண்முகையா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

Leave a Comment