36 ஆண்டுகளுக்கு முன் காணமால் போன இந்தியர்..!!பாகிஸ்தான் சிறையிலிருந்து விடுதலை..!!

36 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன இந்தியவை சேர்ந்த கஜனந்த் சர்மா,நேற்று பாகிஸ்தான் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.ஜெய்ப்பூரை சேர்ந்த இவர்,1982 ஆம் ஆண்டு காணாமல் போனதாக குடும்பத்தினரால் கருதப்பட்டார் அதன்பின் நீண்ட நாட்களாக தேடியும் இவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் சர்மாவின் குடும்பத்திற்கு பாகிஸ்தானிலிருந்து சில ஆவணங்கள் வந்தன அப்போது தான் தெரிந்தது இவர் உயிரொடுதான் இருக்கிறார் என்று.இந்நிலையில்  பாகிஸ்தானில் இன்று சுதந்திர தினம் என்பதால் நல்லெண்ண அடிப்படையில் சர்மா விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
லாகூர் சிறையிலிருந்து அடாரி-வாஹா எல்லை இடையே  பஞ்சாபை சேர்ந்த சமூக ஆர்வலர் ஷெதேவ் சர்மா என்பவர் தான் இவரை கொண்டுவந்து சேர்த்தார்.இது குறித்து கூறிய ஆர்வலர் இந்தியரின் விடுதலை நம் நாட்டுக்கு சிறந்தொரு சுதந்திர தினப் பரிசு என தெரிவித்தார்.
DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment