331 அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில், ஆய்வுசெய்து நோட்டீஸ் வழங்கப்படும்-சென்னை ஆட்சியர் சண்முகசுந்தரம்

சென்னையில் 331 பள்ளிகள் உரிய அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வருகிறது என்று சென்னை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம்  அறிவிப்பு வெளியிட்டார்.
அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வரும் பள்ளிகள் தொடர்பான அறிக்கை ஒன்றை சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்.அதில், சென்னையில் 331 பள்ளிகள் உரிய அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வருகிறது.331 பள்ளிகள் தடையின்மைச்  சான்று மற்றும் அங்கீகாரம் பெறாமல் செயல்பட்டு வருகிறது.உரிய அங்கீகாரம் மற்றும் தடையின்மைச்  சன்று பெறாமல் தொடர்ந்து இயங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
இதன் பின்னர் சென்னை ஆட்சியர் சண்முகசுந்தரம் கூறுகையில்,அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை 6 மாதங்களுக்கு ஒரு முறை அதிகாரிகள் ஆய்வுசெய்ய வேண்டும் .நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட 331 அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில், ஆய்வுசெய்து நோட்டீஸ் வழங்கப்படும் என்று  ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.