3 எம்எல்ஏக்கள் விவகாரம் : உச்சநீதிமன்றம் உரிய தீர்ப்பை வழங்கியுள்ளது- மு.க.ஸ்டாலின்

3 எம்எல்ஏ-க்கள் பிரச்சனையில் உச்சநீதிமன்றம் உரிய தீர்ப்பை வழங்கியுள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் தனபால்  அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்நிலையில் இதை விசாரித்த உச்சநீதிமன்றம் 3 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் அளித்த நோட்டீஸுக்கு இடைக்காலத் தடைவிதித்து உத்தரவு பிறப்பித்தது.

சூலூரில் திமுக வேட்பாளரை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.அப்போது அவர் பேசுகையில், திமுக ஆட்சிக்கு வந்தால் சூலூர் பகுதியின் நீராதார பிரச்சனைகளுக்கு தீர்வு எட்டப்படும் .3 எம்எல்ஏ-க்கள் பிரச்சனையில் உச்சநீதிமன்றம் உரிய தீர்ப்பை வழங்கியுள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Leave a Comment